Breaking News

திருப்பதி மலைப்பாதையில் நடந்து செல்ல 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு அனுமதி இல்லை.!

NEWS COVER
0

கடந்த சில நாட்களாக திருப்பதி மலை பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. அந்த சிறுத்தைகளால் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மற்றும் சிறுவர்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். 



மலைப்பாதையில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்ததை கருத்தில் கொண்டு, அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு மலை பாதையில் செல்ல சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என திருப்பதி தேவஸ்த்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை முதல் 15 வயதுட்குட்பட்ட சிறுவர்கள் பாதயாத்திரையாக மலையேறி செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இருசக்கர வாகனத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மலையேறி செல்லும் குழந்தைகளுக்கு அந்த குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர் மற்றும் பெற்றோரின் தொலைபேசி எண் விவரங்கள் அடங்கிய டேக் ஒன்றை கையில் கட்டி காவல்துறையினர் அனுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: தேசிய செய்திகள்