Posts

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் அறிவிப்பு.

Image
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! GET NEWS COVER  வளிமண்டல கீழ் அடுக்குகளில் கிழக்கு மேற்கு காற்று சந்திக்கும் பகுதியின் நிலை வருகிறது. அதன் காரணமாக  தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகின்றது.  மேலும் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. அதன்படி, கோவை நீலகிரி,  திருப்பூர், ஈரோடு கிருஷ்ணகிரி, தர்மபுரி திருப்பத்தூர்,  வேலூர்,  திருவண்ணாமலை ராணிப்பேட்டை,  திருவள்ளூர், காஞ்சிபுரம்,  சேலம்,  மற்றும் கன்னியாகுமரி  ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆவண எழுத்தர் கட்டண ரசீது கட்டாயம்! பதிவுத்துறை உத்தரவு!!

Image
ஆவண எழுத்தர் கட்டண ரசீது கட்டாயம்! பதிவுத்துறை உத்தரவு!! GET NEWS COVER சொத்துக்களை பத்திரபதிவு செய்யும்போது, அதில் ஆவண எழுத்தரின் கட்டண ரசீது கட்டாயம் இருக்க வேண்டும் என, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பத்திரப்பதிவு செய்யும் பணிகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.  எனினும் ஒரு சில ஆவணங்கள் ஆவண எழுத்தர் மூலமாகவே மேற்கொள்ளப் படுகின்றன. தழிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி சுமார் 5,000க்கும் மேற்பட்ட பதிவுபெற்ற ஆவண எழுத்தர்கள் உள்ளனர். மேலும் பல இடங்களில் இதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்பான புகார்கள் உள்ளன. எனவே இனிமேல் பத்திரபதிவுக்கு வரும் ஆவணங்களில் ஆவண எழுத்தர்களுக்கு எவ்வளவு கட்டணம் வழங்கப்பட்டது என்பதற்கான ரசீது கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என்று  கடந்த ஆண்டே பதிவுத்துறையால்  உத்தரவிடப்பட்டது.   ஆனாலும் இந்த நடைமுறையை சரிவர பல இடங்களில் கடைபிடிக்கவில்லை. இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் அனைத்து சார் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் இனிமேல் பத்திர பதிவுக்கு வரும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் எவ்வளவு கட

அதிகரிக்கும் கோடை வெயில்!! தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுரை.!!

Image
அதிகரிக்கும் கோடை வெயில்!! தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர்களுக்கு அறிவுரை!! GET NEWS COVER த மிழகத்திில் தற்போோதுு கோடைை காலம் துவங்கிியுுள்ளது. கோடைை வெயிிலைை சமாளிிக்க மக்கள் அனைவரும் வீ டுகளில் ஏசி ஃபேன் போன்றவற்றை பகல் நேரங்கள் மற்றும் இரவு நேரங்களிலும் தொடர்ந்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மேலும் அடுத்ததடுத்த மாதங்களில் வெப்பநிலை மேலும் உயரக்கூடும் என்பதால் மேற்படி ஏசி மற்றும் ஃபேன் பயன்பாடுகள் கணிசமாக உயர வாய்ப்புள்ளது. இதற்கான மின் தேவையும் வரும் மாதங்களில் கடுமையாக உயர வாய்ப்புள்ளது.  தமிழகத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. மேலும் கோடைகாலங்களில் வீடுகள் கடைகள், அலுவலகங்கள், மற்றும் நிறுவனங்கள் போன்றவற்றில் ஏசி மற்றும் ஃபேன் மற்றும் ஃபிரிட்ஜ் போன்றவைகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக சராசரி அளவை விட அதிக மின் தேவை ஏற்படுகிறது. எனவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  இல்லையெனில்,கோடைக்காலத்தில் மின் பற்றாக்குறை அதிகளவு ஏற்பட்டு மின்வெட்டு ஏற்படக்கூடும் என தமிழ்நாடு ம

அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய தகவல்!! தமிழக அரசு அறிவிப்பு!

Image
அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய தகவல்!! தமிழக அரசு அறிவிப்பு! GET NEWS COVER தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தற்போது ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி கல்வி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வியில் அதிக அளவு மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர் ஆனால் அதற்குரிய ஆசிரியர் எண்ணிக்கை இல்லை எனவே தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது அதன்படி பெங்களூருவில் உள்ள மண்டல ஆங்கில கல்வி பயிற்சி மையத்தில் இங்குள்ள ஆசிரியர்களுக்கு ஆங்கில வழி கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது.  மேலும் இதற்காக முதல் கட்டமாக சென்னை கோவை திருச்சி சேலம் வேலூர் திருநெல்வேலி தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் 13 மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல் கட்டமாக பெங்களூருவில் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களுக்கு மின் வாரியம் எச்சரிக்கை!! முழு விவரம் என்ன?

Image
அரசு அலுவலகங்களுக்கு மின் வாரியம் எச்சரிக்கை!! முழு விவரம் என்ன? GET NEWS COVER      மின் கட்டணம் செலுத்தாத அரசு துறைகளின் மின் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 15-ம் தேதி சென்னையில் நடந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஆய்வுக் கூட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரசுத் துறைகள் தவிர்த்து ஒழுங்காக மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள மற்ற அரசுத் துறைகளின் அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் மின்வாரிய தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் அத்தியாவசிய சேவைகளான மருத்துவம்,குடிநீர்,தெருவிளக்கு, உள்ளிட்டவற்றை வழங்கும் துறைகள் 7 நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மகத்திற்கு விடுமுறை!! மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

Image
மாசி மகத்திற்கு விடுமுறை!! மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு! GET NEWS COVER கும்பகோணம் மாசிமக திருவிழாவிற்கு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க பரிசீலிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவி்ட்டு உள்ளது. கும்பகோணத்தில் மார்ச் 6ம் தேதி நடக்கும் மாசிமக திருவிழாவிற்கு பொதுமக்களின் நலன் கருதி விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கும்பகோணத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் பொதுநல வழக்கு தொடரந்திருந்தார். மேலும் அவரது மனுவில் திருவையாறு தியாகராஜர் ஆராதனைக்கு அன்றைய தினம் விடுமுறை அளித்ததை போல மார்ச் 6 ல் நடக்கும் மாசிமகத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமெனவும் அன்றைய தினம் டாஸ்மாக் மதுபான கடைகளையும் மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். மனுவை விசாராத்த நீதிபதிகள் இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சாயர் வரும் மார்ச் 1~ம் தேதிக்குள் உரிய உத்தரவினை பிறப்பிக்க வேண்டுமென்று உத்தரவிட்டனர்.

இனிமேல் 6 வயது தான்!! மத்திய அரசு புதிய உத்தரவு.

Image
இனிமேல் 6 வயது தான்!! பள்ளிகளில் சேர மத்திய அரசு புதிய உத்தரவு. GET NEWS COVER 1 ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை வயதை சீரமைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும்  மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.  அதன்படி குழந்தைகளுக்கு  3 வயதாகும் போது PRE-KG, LKG, UKG சேர்க்கலாம் என்றும் 1ம் வகுப்பில் சேர்க்கும் போது 6 வயது நிரம்பி இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் குழந்தைகளுக்கான அடிப்படை கற்றல் திறன் மேம்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  3 வயது முதல் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஐந்து வருட கற்றல் வாய்ப்புகள் அடிப்படைக் கட்டத்தில் உள்ளன. இதில் 3 வருட முன்பள்ளிக் கல்வி மற்றும் 2 வருட ஆரம்ப ஆரம்ப தரம்-I மற்றும் தரம்-II ஆகியவை அடங்கும்.  அங்கன்வாடிகள் அல்லது அரசு/அரசு உதவி பெறும், தனியார் மற்றும் அரசு சாரா முன்பள்ளி மையங்களில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை மூன்றாண்டுகளுக்கு அணுகுவதை உறுதி செய்வதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.