Breaking News

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 18 நிரம்பிய பெண்கள் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்! சமூக நலத்துறை அறிவிப்பு

NEWS COVER
0

பெண்கள் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்துள்ள 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகள்,முதிர்வுத்தொகையை பெற்றுக் கொள்ளுமாறு சமூக நலத்துறை யின் ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.



தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் தமிழ்நாடு மின்விசை நிதி நிறு வனம் வாயிலாக ‘முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட் டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 2001 முதல் மார்ச் 2023 வரை 9 லட்சத்து 56 பெண் குழந்தைகள் பதிவு செய்துள்ளனர்.

குடும்பத்தில் பிறந்த ஒரே ஒரு பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரத் துக்கான நிலை வைப்புத்தொகை யும், 2 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரத்துக்கான நிலை வைப்புத்தொகையும் குழந்தைக ளின் பெயரில் முதலீடு செய்யப் படும். அதேபோல முதல் பிரசவத் தில் ஒரு பெண் குழந்தையும், 2-வது பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் என மொத்தம் 3 பெண் குழந்தைகள் இருந்தால், சிறப்பு அனுமதியின் பேரில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் முதலீடு செய்யப்படும்.

மாதந்தோறும் 2-ம் செவ்வாய்க்கிழமை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன

இதில் பயன்பெற குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத் துக்குள் இருக்க வேண்டும். அதே நேரம்2-வதுபெண்குழந்தைபிறந்து 3 ஆண்டுக்குள் இதற்கு விண்ணப் பிக்க வேண்டும். பெற்றோர்களில் ஒருவர் 40 வயதுக்குள் குடும்ப கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும். மேலும் பெண் குழந்தைகள் 10-ம் வகுப்பு எழுதி, 18 வயது வரை குழந்தை திருமணம் புரியாமல், இருக்கும் நிலையில் அவர்களுக்கு வட்டியுடன் கூடிய வைப்புத் தொகை, முதிர்வுத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் 2001 முதல் 2005 வரை பதிவு செய்த பெண் குழந்தைகளில் 18 வயதை நிறைவு செய்த 1 லட்சத்து 40,003 பெண் குழந்தைகளுக்கு ரூ.350.28 கோடி

முதிர்வுத்தொகையாக வழங் கப்பட்டுள்ளன. இதற்கிடையே 1.5 லட்சத்துக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் 18வயதுநிறைவடைந் தும் இதுவரை முதிர்வுத் தொகைக்கு விண்ணப்பிக்காமல் உள்ளனர்.

இதையொட்டி அனைத்து மாவட்ட சமூக நல அலுவலகங்க ளில், மாதந்தோறும் 2-ம் செவ்வாய்க்கிழமை, பெண் குழந் தைகள் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின் றன. இதில் முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் வாயிலாக பயன்பெற விரும்பு வோர், 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகள் முதிர்வுத் தொகைக் காக விண்ணப்பிப்போர் உள்ளிட் டோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ்,பதிவு செய்து18வயதுநிரம்பிய குழந்தைகள் ஒரு மாதத்துக்குள், தங்களது பெயரில் தொடங்கிய புதிய வங்கிக் கணக்கின் புத்தக நகலுடன், மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி முதிர்வுத் தொகையை பெற்றுக்கொள்ளு மாறு சமூக நலத்துறை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.


பெண்கள் பாதுகாப்பு திட்டம்

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண்குழந்தையுடன் கணவனோ, அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 வயது பூர்த்தியடையும் முன் விண்ணப்பிக்க வேண்டும். முதல் குழந்தை பெண் குழந்தை பிறந்து இரண்டாவது இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

ஒரு பெண் குழந்தையுடன் கணவனோ அல்லது மனைவியோ நிரந்தர அறுவை சிகிச்சை செய்திருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.50,000/- க்கான டெபாசிட்பத்திரம் வழங்கப்படும். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து ஒரு குழந்தைக்கு ரூ.25,000/- வீதம் 2 குழந்தைக்கு ரூ.50,000/- க்கு 2 டெபாசிட் பத்திரங்கள் வழங்கப்படும். முதல் குழந்தை பெண் குழந்தை, இரண்டாவது பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தாலும், மூன்று குழந்தைகளுக்கும் ஒரு குழந்தைக்கு ரூ.25,000/- வீதம், 3 குழந்தைகளுக்கும் ரூ.75,000/- க்கு 3 டெபாசிட் பத்திரங்கள் வழங்கப்படும். இதற்கான முதிர்வுத்தொகை இக்குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடையும் பொழுது பெற்றுக்கொள்ளலாம்.

பொது பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் பொழுது தாயாரின் மாற்றுச்சான்று, தந்தையின் மாற்றுச்சான்று, திருமண பத்திரிக்கை, முதல் குழந்தை பிறப்பு சான்று, 2 - ஆம் குழந்தை பிறப்பு சான்று, வருமான சான்று ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும், இருப்பிடச்சான்று, ஜாதிச்சான்று, ஆண் வாரிசு இல்லாத சான்று, தாயார் அல்லது தந்தையின் கருத்தடை செய்த சான்று (40 வயதுக்குள் இருக்க வேண்டும்) மருத்துவரிடம் பெற்றிருக்க வேண்டும். ரோட்டரி வழக்கறிஞரிடம் 2 பெண் குழந்தைக்கு பின் ஆண் குழந்தையை தத்தெடுக்க மாட்டோம் என்று உறுதிமொழிப்பத்திரம், குடும்ப புகைப்படம், குடும்ப அட்டை உள்ளிட்ட சான்றிதழ்கள் இணைக்கப்பட வேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர் மற்றும் மகளிர் ஊர்நல அலுவலரை நேரில் அணுகி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 

Tags: சேவை செய்திகள்