Breaking News

சாலை விபத்தில் உயிரிழந்த விஜய் ரசிகரின் கண்கள் தானம். தளபதி விஜய் விழியகத்தின் முதல் தானம்.

NEWS COVER
0

விஜய் மக்கள் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி நடிகர் விஜய்யின் உத்தரவுபடி 'தளபதி விஜய் விழியகம்' என்ற கண்தான அமைப்பு தொடங்கப்பட்டது.


GET NEWS COVER

அதில் இதுவரை 7,000-க்கும் அதிகமான ரசிகர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பகுதியை சேர்ந்த கரண் என்பவர் கடந்த 12ம் தேதி சாலை விபத்தில் மரணமடைந்தார். நடிகர் விஜய் ரசிகரான அவர் 'தளபதி விஜய் விழியகத்தில் கண்களை தானமாக கொடுக்க பதிவு செய்திருந்தார்

இதையடுத்து அவரின் சகோதரர் மற்றும் குடும்பத்தினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கரணின் கண்களை தானமாக வழங்கியுள்ளனர்.அதற்கான சான்றிதழ் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது. 

விஜய்யின் விழியகம் தொடங்கப்பட்டு முதல் கண் தானம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: சினிமா