Breaking News

அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு! தமிழக அரசு அறிவிப்பு.

NEWS COVER
0
அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு! தமிழக அரசு அறிவிப்பு.

GET NEWS COVER

தமிழகம் முழுவதும் நாளை (11.12.2023) முதல் தொடங்கவிருந்த பள்ளி அரையாண்டுத் தேர்வுகள் அனைத்து மாவட்டங்களிலும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் கனமழை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளால் அரையாண்டுத் தேர்வு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் நாளை ( 11.12.2023) முதல் தொடங்கவிருந்த 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான  அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, 6 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பா் 13 முதல் 22-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளன. 
6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையும் 

9, 10ஆம் வகுப்புகளுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வுகள் நடைபெறுகிறது. 

 பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், 

பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்