Breaking News

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை. வானிலை மையம் அறிவிப்பு

NEWS COVER
0

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி,மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனவே மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்  என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

     *************************************

Tags: வானிலை செய்திகள்