Breaking News

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி! செப் 15 முதல் தொடக்கம்.

NEWS COVER
0
அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை.. சிற்றுண்டி திட்டம். 
.
GET NEWS COVER       09.09.2022
..
அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்  வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசினர் தொடக்கப் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ மற்றும்  மாணவிகளுக்கு அனைத்துப் வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டியை வழங்கிட வேண்டும் என தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின்  முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மொத்தம் 1,545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. 

 தமிழக அரசு இதற்காக 33.56 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.  இதன்மூலமாக 1.14 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவர். அதன் பின்னர் இந்த திட்டம்  தமிழகம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது.

 இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி மதுரையில் துவக்கி வைக்கிறார்.

Tags: தமிழக செய்திகள்