Breaking News

ஆரஞ்சு அலர்ட்!! நவம்பர் 1,2 தேதிகளில் கனமழை எச்சரிக்கை!!....

NEWS COVER
0
தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட்!! நவம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் மிக கனமழை எச்சரிக்கை!! வானிலை ஆய்வு மையம் தகவல்.
GET NEWS COVER
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் துவங்கியது. இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிகாலை முதலே லேசானது முதல் கனமானது வரை மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை சற்று தீவிரமடைந்து வரும் நவம்பர் 1 மற்றும் 2 ம் தேதிகளில் லேசான மழை முதல் இடியுடன் கூடிய மிக கனமானது வரை மழை தமிழகம் மற்றும் புதுவையில் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 மேலும் நவம்பர் 1 மற்றும் 2 ம் தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் ( ORANGE ALERT ) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 3 ம் தேதிக்கு பிறகு மழை படிப்படியாக குறைந்து சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் அதிகரிக்க கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: வானிலை செய்திகள்