Breaking News

உயிருடன் புதைக்க 42 லட்சம்!! ரஷ்யாவில் வினோதம்!!

NEWS COVER
0
உயிருடன் கல்லறையில் புதைக்க 42 லட்சம்!! ரஷ்யாவில் வினோதம்!!முழு விவரம் என்ன?

GET NEWS COVER

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள கல்லறையில் பிரகடெட் என்ற நிறுவனம் உயிருடன் சவப்பெட்டியில் புதைக்கும் தெரபியைச் செயல்படுத்தி வருகின்றனர்.

இதனை சைகிக் தெரபி என்று அழைக்கின்றனர். இதன் மூலம் ஆன்சைடியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை உயிருடன் குழியில் புகைக்கின்றனர். அவ்வாறு புதைப்பதன் மூலம் அவர் அதனை எதிர்த்துப் போராடக் கூடிய திறன் கிடைக்கும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

இதற்காக அதிகபட்ட கட்டணமாக இந்திய மதிப்பு படி ரூ.42 லட்சம்  வசூலிக்கப்படுகிறது. 
மேலும் இதில் குறைந்தபட்ச கட்டணமாக இந்திய மதிப்பில் ரூ.12 லட்சம் வசூலிக்கப்படுகிறது. இந்த சேவையை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  உயிருடன் ஒருவர் சவப்பெட்டியுடன் குழியில் இறங்குவதை நீங்கள் வீட்டில் இருந்த படியே பார்க்கலாம். இதுவும் ஒரு தெரபி தான் என்று நிறுவனம் கூறுகிறது. வீடியோவில் அவர்கள் உயிருடன் புதைப்பதைப் பார்க்கும் போது இறுதி அஞ்சலி ஏற்பாடுகள் உட்பட என்று வசதிகளும் செய்து தரப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்படி அகாடமியின் நிறுவனர் இது குறித்துக் கூறுகையில், மனிதனை உயிருடன் புதைப்பது முழுமையாகப் பாதுகாப்பானது என்றும் இதன் மூலம் அவர்கள் இறப்பின் அனுபவத்தைப் பெற்று மீண்டும் வாழும் எண்ணம் வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செய்வதன் மூலமாக அவர்களின் கவலை, பயம், பதற்றம் போன்ற நோய்கள் குணமடைய வாய்ப்பிருக்கிறது என்றும் இதன் மூலம் மனநோயாளிகளையும் குணப்படுத்த முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

Tags: உலக செய்திகள்