Breaking News

5 வயது சிறுவன் உயிரிழப்பு!! போலி மருத்துவர் கைது!

NEWS COVER
0
5 வயது சிறுவன் உயிரிழப்பு!! போலி மருத்துவர் கைது.
GET NEWS COVER
காய்ச்சலுக்காக ஊசி போடப்பட்டதில் 5 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் போலி பெண் மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் இவரது மனைவி கற்பகவள்ளி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இவருக்கு யுவஸ்ரீ (10)என்ற மகளும் கவி தேவநாதன் (5)என்ற மகனும் இருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கவி தேவநாதனுக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அவர்கள் வீட்டின் அருகே வசிக்கும் ஒரு மருத்துவ உதவியாளர் அவனுக்கு ஊசி செலுத்தியுள்ளார். அதன் பின்னர் சம்பந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான் அங்கும் அவனுக்கு ஊசி செலுத்தப்பட்டது.
 அதன் பின்னர் வீட்டுக்கு வந்த சிறுவன் அரை மணி நேரத்தில் மயங்கி விழுந்த நிலையில் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி மற்றும் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சம்பவம் குறித்து விசாரணை செய்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 அதன் பின்னர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் நடத்திய விசாரணையில் வழக்கு பதிவு செய்து சிறுவனுக்கு ஊசி செலுத்திய போலி பெண் மருத்துவர் ஆக்னேஸ்ட் கேத்தர் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஊசி செலுத்தியதில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags: தமிழக செய்திகள்