மாசி மகத்திற்கு விடுமுறை!! மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

மாசி மகத்திற்கு விடுமுறை!! மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
GET NEWS COVER

கும்பகோணம் மாசிமக திருவிழாவிற்கு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க பரிசீலிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவி்ட்டு உள்ளது.

கும்பகோணத்தில் மார்ச் 6ம் தேதி நடக்கும் மாசிமக திருவிழாவிற்கு பொதுமக்களின் நலன் கருதி விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கும்பகோணத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் பொதுநல வழக்கு தொடரந்திருந்தார்.

மேலும் அவரது மனுவில் திருவையாறு தியாகராஜர் ஆராதனைக்கு அன்றைய தினம் விடுமுறை அளித்ததை போல மார்ச் 6 ல் நடக்கும் மாசிமகத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமெனவும் அன்றைய தினம் டாஸ்மாக் மதுபான கடைகளையும் மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

மனுவை விசாராத்த நீதிபதிகள் இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சாயர் வரும் மார்ச் 1~ம் தேதிக்குள் உரிய உத்தரவினை பிறப்பிக்க வேண்டுமென்று உத்தரவிட்டனர்.

Comments

Popular posts from this blog

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டர்... 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்.

மாதம் ரூபாய்1000 உதவித்தொகை!! நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஜனவரி மாதமே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!! ஆன்லைன் இணைப்பது எப்படி??