Breaking News

குரூப் 4 தேர்வு! ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த 742 பேர் தேர்ச்சி விவகாரம்!! பயிற்சி மையம் விளக்கம்.

NEWS COVER
0

குரூப் 4 தேர்வு! ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த 742 பேர் தேர்ச்சி விவகாரம்!! பயிற்சி மையம் விளக்கம்.
GET NEWS COVER

தமிழ்நாடு அரசின் நில அளவர் பணிக்கான குரூப் 4 தேர்வில் ஒரே தனியார் பயிற்சி மையத்தை சேர்ந்த 742 பேர் தேர்ச்சி பெற்ற விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜூலை 24 ம் தேதி நடந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மையத்தின் குரூப்4 தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 24 ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இதில் தேர்ச்சி பெற்றவர்களில் 742 பேர் காரைக்குடியில் உள்ள பிரமிட் தனியார் பயிற்சி மையத்தில் பயின்ற விவரம் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழக சட்டமன்றத்திலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து மேற்படி தனியார் பயிற்சி மையத்தின் இயக்குனர் தற்போது விளக்கம் அளித்துள்ளார் அதன்படி தற்போதைய நில அளவர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அத்தனை பேரும் ஏற்கனவே குரூப்-1 தேர்வுக்காக பயிற்சி எடுத்து வந்தவர்கள் என்றும் அவர்களுக்கு குரூப் 4 தேர்வு எளிதான தேர்வாக இருந்ததால் அவர்களால் வெற்றி பெற முடிந்தது எனவும் தங்கள் பயிற்சி மையத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 65 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று அரசு பணிக்கு செல்கிறார்கள் என்றும் விளக்கம் அளித்துள்ளார்
பயிற்சி மையம் விளக்கம்.


Tags: தமிழக செய்திகள்