Breaking News

கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு! ஏப்ரல் 6ல் தொடங்கும் என அறிவிப்பு!!

NEWS COVER
0
கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு! ஏப்ரல் 6ல் தொடங்கும் என அறிவிப்பு!!

GET NEWS COVER
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் தாலுகாவில் உள்ள கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அங்குள்ள 110 ஏக்கர் தொல்லியல்் மேட்டில அகழாய்வு பணிகள்் நடந்து வருகின்றன. மேற்படி அகழாய்வு பணியின் முதல் 3 கட்ட பணிகளை மத்திய அரசின் தொல்லியல்் துறையும் அடுத்த 5 கட்ட அகழாய்வு பணிகளை தமிழக அரசின் தொல்லிியல் துுறையும் மேற்கொண்டன.
 இதன் 9ம் கட்ட அகழாய்வு பணி வரும் ஏப்ரல் 6ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் கீழ அடியுடன் சேர்த்து வெம்பக்கோட்டை,கங்கைகொண்ட சோழபுரம்,கீழ்நமண்டி,துலுக்கர்பட்டி, பூதிநத்தம் ,பொற்பனைக்கோட்டை ஆகிய இடங்களிலும் அகழாய்வு பணிகள் நடைபெற இருக்கிறது.

மேலும் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக 9ம் கட்ட அகழாய்வு பணியினை வரும் ஏப்ரல் 6 ம் தேதி துவங்கி வைக்க உள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்