இனி இரவு 9 மணி வரை மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்கலாம் தொல்லியல் துறை அறிவிப்பு
இனி இரவு 9 மணி வரை மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்கலாம்! தொல்லியல் துறை அறிவிப்பு
GET NEWS COVER
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, பகுதிகளை இரவிவிலும் பார்த்து ரசிப்பதற்காக, ஜூலை 15 முதல் இரவு 9 மணிவரை சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
தற்போது மாமல்லபுரத்தில் ஜி-20 மாநாடு, ஆகஸ்டில் சர்வதேச பட்ட திருவிழா, அடுத்து அலைச்சறுக்கு என சர்வதேச நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால் நிகழ்ச்சிக்கு வருபவர்கள் மாமல்லபுர புராதன சின்னங்களை இரவிலும் கண்டு ரசிக்கும் வகையில் 15ஆம் தேதியில் இருந்து இரவு 9 மணி வரை அலங்கார மின்னொளியுடன், புராதன சின்னங்கள் திறந்திருக்கும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்