Breaking News

பழைய கட்டிடத்தில் இயங்கும் 44 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்ட அரசாணைகள் வெளியீடு! பட்டியல் இணைப்பு.

NEWS COVER
0

பத்திரப் பதிவுத்துறையில் 44 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்ட அரசாணைகள் வெளியீடு: மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. பி.மூர்த்தி அவர்கள் தகவல்

பத்திரப் பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கான உரிய அடிப்படை வசதிகளுடன் நவீன முறையில் சொந்த கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்திரவிட்டிருந்தார்கள். அதற்கிணங்க நடப்பாண்டில் 44 புதிய அரசு கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கி அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி ஏறக்குறைய நூற்றாண்டுகள் பழமையான கட்டடங்களில் புராதான கட்டடங்கள் தவிர்த்து பிற கட்டடங்களில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகங்களான இராஜபாளையம், எட்டையபுரம், ஸ்ரீவைகுண்டம், முறப்பநாடு. திருவண்ணாமலை, காட்பாடி, புதுப்பேட்டை, பண்ருட்டி, குள்ளஞ்சாவடி. ஆழ்வார்திருநகரி, குடவாசல், கழுகுமலை, சாத்தான்குளம், திருத்தணி, ஸ்ரீபெரும்புதூர், திருக்கழுகுன்றம், ஆரணி, குளித்தலை, கமுதி, அருப்புக்கோட்டை, செம்பனார்கோவில், T.பழூர், அரகண்டநல்லூர், சத்திரப்பட்டி, சூலூர், கிணத்துக்கடவு, பூதலூர், ஒரத்தநாடு, லால்குடி, மயிலம், சுவாமிமலை, வேதாரண்யம், நீடாமங்கலம், நாகூர், சீர்காழி, புள்ளம்பாடி, உத்திரமேரூர், மல்லசமுத்திரம், சங்கராபுரம் மற்றும் வல்லம் ஆகிய 40 சார்பதிவாளர் அலுவலகங்களின் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு அதே இடத்தில் உரிய அடிப்படை வசதிகளுடன் நவீன முறையில் புதிய வடிவமைப்புடன் கூடிய சொந்த கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.

மேலும், தற்போது வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகங்களான ஏரல், மேலப்பாளையம், பெருநாழி மற்றும் கொள்ளிடம் ஆகிய நான்கு (4) அலுவலங்களுக்கு இதற்கென கண்டறியப்பட்டுள்ள தகுதியான இடங்களில் உரிய அடிப்படை வசதிகளுடன் நவீன முறையில் புதிய சொந்த கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.

Tags: தமிழக செய்திகள்