கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

NEWS COVER
0

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.



கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தில் விண்ணப்பிக்க முதற்கட்ட முகாம்கள்‌ ஜுலை 24 தேதி முதல்‌ ஆகஸ்ட்‌ 04 தேதி வரை நடைபெற்றது. அதேபோல் இரண்டாம்‌ கட்ட முகாம்கள்‌ ஆகஸ்ட்‌ 05 தேதி முதல்‌ 14 தேதி வரை நடைபெற்றது. 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

18,19,20 தேதிகளில்  விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

விதிவிலக்கு அளிக்கப்பட்ட குடும்பங்களில்‌ உள்ள தகுதிவாய்ந்த மகளிர்‌ மற்றும்‌ ஏற்கனவே முகாம்களில்‌ பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில்‌ வருகைபுரிய இயலாத குடும்பத்‌ தலைவிகள்‌ விண்ணப்பங்கள்‌ பதிவு செய்ய, இன்று, நாளை மற்றும்‌ 20 ஆகிய மூன்று நாட்கள்‌ சிறப்பு முகாம்கள்‌ நடத்தப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்