Breaking News

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

NEWS COVER
0

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்



தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக, கடந்த சட்டசபைத் தேர்தலின் போது வாக்குறுதியில் அறிவித்திருந்தது.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் எதிர்வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறும் பணி நடைபெற்று வருகிறது.இதற்காக முதற்கட்ட முகாம் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4 தேதி வரை நடைபெற்றது. 

இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 14 தேதி வரை நடைபெற்றது. அந்த முகாம்களின் மூலம் இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அந்த குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்கள் மற்றும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இவ்வாறு விதிவிலக்கு அளிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள தகுதி வாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கெனவே முகாம்களில் பதிவு செய்ய தவறியவர்களுக்காக விண்ணப்பங்கள் பதிவு செய்ய, ஆகஸ்ட் 18ம் தேதி முதல், மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.எனவே, இன்று ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நடைபெற மட்டுமே இந்த சிறப்பு முகாம் நடத்தப்படும். 

இதுவரை மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பிக்காதவர்கள் இன்று மறக்காமல் இந்த சிறப்பு முகாம் மூலம் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசின் சார்பில் கேட்டுக் கொள்ளப்ட்டது 

Tags: தமிழக செய்திகள்