Breaking News

நாளை (03.01.2024) துவங்குகிறது சென்னை புத்தக கண்காட்சி! முதல்வர் துவக்கி வைக்கிறார்.!

NEWS COVER
0
நாளை (03.01.2024) துவங்குகிறது சென்னை புத்தக கண்காட்சி! 

GET NEWS COVER

சென்னை புத்தகக் கண்காட்சி நாளை (3.01.2024 )தொடங்குகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் சென்னை 47 வது சென்னை புத்தக கண்காட்சி நாளை (03.01.2024) தொடங்கி 21.01.2024 வரை நடைபெறுகிறது.

 47 வது சென்னை புத்தக கண்காட்சி சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் சுமார் 1000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. மேற்படி புத்தக கண்காட்சியினை நாளை தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க. ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.
 புத்தக கண்காட்சி வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் வார இறுதி நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் நடைபெறுகிறது. இதற்கான நுழைவு சீட்டுகளை ஆன்லைன் மூலமாகவும வாங்கிக் கொள்ளலாம்.

Tags: தமிழக செய்திகள்